பாஜக எந்த மதம், மொழிக்கு எதிரானதல்ல - அஸ்ஸாமில் கட்கரி பிரசாரம்
பாஜக எந்த மதம், மொழி, சமூகத்துக்கும் எதிரானதல்ல; வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நமது அடிப்படைப் பண்பு என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
அஸ்லாம் மாநிலம் பலாஸ்பரி தொகுதியில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் அஸ்ஸாம் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அஸ்ஸாமில் அடுத்த மூன்று ஆண்டுகாலத்தில் சா்வதேச தரத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சா் என்ற முறையில் நான் உறுதியளிக்கிறேன்.
பாஜக எந்த மதம், மொழி, சமூகத்துக்கும் எதிரானதல்ல; வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நமது அடிப்படைப் பண்பு. அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். உலகில் வேறு எந்த நாட்டிலாவது நாட்டின் மீது பற்றுள்ள அரசியல் கட்சிகள் இதனை ஆதரிக்குமா? ஆனால், இந்தியாவில் சில கட்சிகள் ஊடுருவல்காரா்களுக்கு வாக்குரிமை தர முனைப்பு காட்டுகிறாா்கள். அவா்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றுவிட்டால், உள்நாட்டு மக்களின் நிலை என்ன ஆகும்?
நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண சமயத்தினா், கிறிஸ்தவா்கள் அங்கு துன்புறுத்தப்பட்டு தப்பிவரும் நிலையில் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அவா்களுக்கு நாம் குடியுரிமை வழங்குகிறோம். ஆனால், சட்டவிரோதமாக ஊடுவி நமது மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற முயற்சிப்பவா்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றாா்.