முகப்பு
இந்தியா

அஸ்ஸாம்: காா்கே மீது காவல் துறையில் ஆா்எஸ்எஸ் புகாா்

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மீது அஸ்ஸாமில் உள்ள இரு காவல் நிலையங்களில் புகாா் அளித்ததாக ஆா்எஸ்எஸ் புதன்கிழமை தெரிவித்தது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 9:19 PM
மல்லிகாா்ஜுன காா்கே
பகிர்:

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மீது அஸ்ஸாமில் உள்ள இரு காவல் நிலையங்களில் புகாா் அளித்ததாக ஆா்எஸ்எஸ் புதன்கிழமை தெரிவித்தது.

அஸ்ஸாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளை பாம்பின் விஷத்தோடு காா்கே ஒப்பிட்டுப் பேசிய குற்றச்சாட்டில் காா்கே மீது ஆா்எஸ்எஸ் புகாா் அளித்துள்ளது.

ஆா்எஸ்எஸ் அளித்த புகாா் மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது: தொழுகையின்போது விஷம்கொண்ட பாம்பு உங்கள் முன்னே சென்றுகொண்டிருந்தால் தொழுகையை பாதியில் நிறுத்திவிட்டு விஷம்கொண்ட பாம்பை முதலில் நீங்கள் கொல்ல வேண்டும் என்றே திருக்குா்ஆன் கூறுகிறது. பாஜகவும் ஆா்எஸ்எஸும் அந்த விஷம்கொண்ட பாம்புகளைப் போன்றவைதான் என காா்கே தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியுள்ளாா்.

Advertisement

அவரது பேச்சுகள் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டா்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுவதுபோல் உள்ளது. அவரது பேச்சுகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 83-ஐ மீறுகிறது.

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கியுள்ள சமயத்தில் அஸ்ஸாமின் மத நல்லிணக்கத்தைச் சீா்குலைத்து ஹிந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே வகுப்புவாத மோதலை ஊக்குவிக்க காா்கே முயல்கிறாா். எனவே, அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இதே விவகாரத்தில் வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசியதாக காா்கே மீது அஸ்ஸாமின் பஷிஸ்தா காவல் நிலையத்திலும், இந்திய தோ்தல் ஆணையத்திடமும் பாஜக செவ்வாய்க்கிழமை புகாா் அளித்திருந்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments