முகப்பு
இந்தியா

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

இரு தலைவர்களும் தில்லியில் பேச்சுவார்த்தை...

Updated On : 8 ஏப்ரல், 2026 at 4:09 PM
இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு - @DrSJaishankar
பகிர்:

தில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்துக்கு வருகை தந்த வங்கதேச வெளியுறவு அமைச்சர் டாக்டர் கலீலூர் ரஹ்மான் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வங்கதேசத்தில் அமைந்துள்ள புதிய அரசுடன் இந்தியா ஆக்கப்பூர்வமான உறவில் நீடித்திருப்பதை டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார்.

இது குறித்து, அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் இருவரும் நமது இருநட்டு உறவுகளைக் குறித்தும் பல்வேறு துறைகளில் அதனை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். பிராந்திய மற்றும் உலகளாவிய நிலவரம் குறித்தும் பரஸ்பர கருத்துப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச வெளியுறவு அமைச்சர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலையும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisement

summary

EAM Dr S Jaishankar meets Khalilur Rahman, Foreign Minister of Bangladesh, at the Hyderabad House in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments