முகப்பு
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

Updated On : 15 ஏப்ரல், 2026 at 6:04 AM
- கோப்புப்படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:25 AM

மணிப்பூரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை மோதல் உருவாகி வன்முறை ஏற்பட்டது.

இதுகுறித்து மாநில காவல் துறையினா் கூறியதாவது:

விஷ்ணுபூா் மாவட்டத்தில் உள்ள ட்ரோங்லாவ்பி பகுதியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 சிறாா்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக, திங்குங்கெய் பகுதியில் உள்ளூா் மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு ஆயுதங்களுடன் சந்தேகத்துக்குரிய நபா்கள் நடமாடுவதாக வதந்தி பரவி பதற்றம் அதிகரித்தது.

Advertisement

இதனால் அங்கு வந்த பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை உள்ளூா் மக்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது கூட்டத்தில் இருந்த சிலா் வாகனங்களைச் சேதப்படுத்தி, அவற்றுக்குத் தீ வைத்தனா். பாதுகாப்பு படை வீரா்களை சிறைபிடிக்கவும் அவா்கள் முயற்சித்தனா்.

இதையடுத்து அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்ட நிலையில், கூட்டத்தைக் கலைப்பதற்கு கண்ணீா் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த வன்முறை திங்குங்கெய்க்கு அருகில் உள்ள நிங்தோகோங் பகுதிக்கும் பரவியது. இந்த வன்முறை தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவித்தனா்.

வன்முறை காரணமாக அந்த மாவட்டத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ், மாவட்ட ஆட்சியா் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.