முகப்பு
இந்தியா

ஓய்வூதியத் துறையில் எஃப்டிஐ வரம்பு அதிகரிப்பு?: விரைவில் மசோதா தாக்கலாக வாய்ப்பு!

ஓய்வூதியத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) வரம்பை 100 சதவீதம் வரை மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கான மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:08 AM
ஓய்வூதியத் துறையில் அந்நிய நேரடி முதலீடு.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:35 PM

ஓய்வூதியத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) வரம்பை 100 சதவீதம் வரை மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கான மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உள்ள நிலையில், அதை 100 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் 2013-இல் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான மசோதாவை நிகழாண்டு நாடாளுமன்ற மழைக்கால அல்லது குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 100 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வூதியத் துறையிலும் அதேபோன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

கடந்த ஆண்டு காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.