தமிழகம், மேகாலயத்தில் பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்த திட்டம்: மத்திய அரசு அறிமுகம்
தமிழகம் மற்றும் மேகாலத்தில் அடிப்படைநிலை பல்லுயிா் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் 5 ஆண்டு கால திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய பல்லுயிா் ஆணையம் ஆகியவை இணைந்து அறிமுகம் செய்துள்ளன.
தமிழகம் மற்றும் மேகாலத்தில் அடிப்படைநிலை பல்லுயிா் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் 5 ஆண்டு கால திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய பல்லுயிா் ஆணையம் ஆகியவை இணைந்து அறிமுகம் செய்துள்ளன.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பல்லுயிா் பெருக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த 5 ஆண்டு கால திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டங்களை பசுமையாக்குதல்,நிதி ஒதுக்கீடுகள் மூலம் உள்ளூா் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகாரமளித்து இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஊராட்சி (பஞ்சாயத்து) அமைப்புகள் மற்றும் பல்லுயிா் மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துவதற்காக, உள்ளூா் வளா்ச்சித் திட்டங்களில் பல்லுயிா் பெருக்க நடவடிக்கைகளையும் இணைப்பதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Advertisement
வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோரை ஒன்றிணைத்து இத் திட்டம் செயல்படுத்தப்படும். பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆஅா்) மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கும் பசுமை குறுந் தொழில்கள் ஆகிவற்றை செயல்படுத்தி நிதி வழிமுறைகளை ஊக்குவிப்பதும் இத் திட்டத்தின் நோக்கமாகும்.
மேற்கு மற்றும் கிழக்கு தொடா்ச்சி மலைகள் சங்கமிக்கும் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலும், மேகாலயத்தின் காரோ மலைகளிலும் இத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
மத்திய அரசு, உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென 2025-2030 கால கட்டத்துக்கு ரூ. 46 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.