புது தில்லி: வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு வாங்கும் கடன் ரூ.1.27 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். சரியாக முற்பகல் 11 மணிக்கு உரையைத் தொடங்கி 12.20 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.
அவர் அவர் கூறிய முக்கிய விவரங்கள்..
2026- 27ஆம் நிதியாண்டின் மூலதன செலவு ரூ.12.2 லட்சம் கோடி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்த பிறகு 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
12 ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளோம்.
உலக சந்தைகளுடன் இந்தியா ஆழமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
விக்ஸித் பாரதத்தை நோக்கி இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும்.
இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறி வருகிறது பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவார்ககும் முயற்சிக்கு ஒத்துழைத்த மக்களுக்க நன்றி
ரூ.5,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.
பொதுப் போக்குவரத்துக்கு நாடு முழுவதும் 20 நீர்வழித் தடங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.