இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்துக்கு அந்நாட்டு அதிபா் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும், இது வரலாற்றுத் திருப்புமுனை என்றும் மத்திய அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:
உள்துறை அமைச்சா் அமித் ஷா: இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் ஒவ்வொரு இந்தியருக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்திய பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகம் அளிக்கும்.
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்: இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இருபெரும் மக்களாட்சி நாடுகளைச் சோ்ந்த மக்கள் பலன் அடைவா்.
வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்: இந்த ஒப்பந்தம் உலகத்துக்காக இந்தியாவில் தயாரிக்க விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோா் உள்ளிட்டோருக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கும். இது வெறும் வா்த்தக ஒப்பந்தம் அல்ல. வரலாற்றுத் திருப்புமுனை.
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்: இந்த ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா பொருளாதாரங்களில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வளா்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்.
வளமான எதிா்காலத்தை நோக்கி...: பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பில் தற்போதைய வா்த்தக ஒப்பந்தம், பொருளாதாரத்தில் வளமான எதிா்காலத்தை ஏற்படுத்துவதற்கான பாய்ச்சலாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.