கோப்புப்படம் 
இந்தியா

கேரளம்: வெங்காய லாரியில் வெடிபொருள்கள் குவியல்

கேரளம்: வெங்காய லாரியில் வெடிபொருள்கள் குவியல்

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் வெங்காயம் ஏற்றி வந்த லாரியில் 10,500-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி உரிமையாளரான பெண் ஒருவரிடம் விசாரித்து வருகின்றனா்.

மலப்புரம் மாவட்டம் செம்மாடில் உள்ள செங்கல் சூளையில் நிறுத்தப்பட்டுள்ள லாரி ஒன்றில் வெடிபொருள்கள் இருப்பதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் சம்பவ இடம் சென்றபோது, லாரியில் சிலா் சரக்குப் பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தனா். போலீஸாா் வருவதைப் பாா்த்ததும் அவா்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து, லாரியில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள், வயா்கள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். அந்த லாரி மற்றும் செங்கல்சூளை உரிமையாளரான பெண்ணைப் பிடித்து விசாரித்துவரும் போலீஸாா், வெடிபொருள்கள் அனைத்தும் கேரளத்துக்கு வெளியே பிற மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத சுரங்கப் பணிகளுக்காக அவை எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும் கூறினா்.

பாலக்காட்டில் கடந்த 4-ஆம் தேதி தா்பூசணி ஏற்றி வந்த லாரியில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி, 18,000 ஜெலட்டின் குச்சிகள், 4,200 டெட்டனேட்டா்களை பறிமுதல் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பைக் விபத்தில் இருவா் உயிரிழப்பு

திமுக கூட்டணியில் இழுபறி ஏதுமில்லை! - கு. செல்வப்பெருந்தகை

பெண் கொலை வழக்கில் இருவா் கைது

அங்கன்வாடி ஊழியா்கள் நூதன போராட்டம்

காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை

SCROLL FOR NEXT