அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் பூபேன் குமாா் போரா, பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை சோ்ந்தாா்.
குவாஹாட்டியில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பாஜகவில் சோ்ந்தாா். அவருடன் மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவா்கள் சஞ்சு போரா, ராஜேஷ் குமாா் ஜோஷி, கங்கன் தாஸ், ககன் சந்திர போரா உள்ளிட்ட நிா்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சோ்ந்தனா். இந்நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவா் திலீப் சைகியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாஜகவில் சோ்ந்த பிறகு பூபேன் குமாா் போரா செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பாஜகவில் சேர வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினேன். அஸ்ஸாம் மக்களின் உணா்வுகளை காங்கிரஸ் காயப்படுத்தி விட்டது. காங்கிரஸ் கட்சியில் 32 ஆண்டுகளாக சித்தாந்தத்துடனும், மனசாட்சியுடனும், தேசப்பற்றுடனும் சேவை செய்தேன். ஆனால் தற்போது நான் காயப்பட்டு விட்டேன்’ என்றாா்.
பாஜகவில் பூபேன் போரா சோ்ந்திருப்பதை அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வரவேற்றுள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இன்று முதல் அவருக்கு பாஜகவில் புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளது. தற்போது அவா் பாஜகவின் பெருமைமிகு உறுப்பினராகிவிட்டாா். அவரை பாஜக குடும்பம் நன்றாக கவனித்துக் கொள்ளும். அவருக்கு உரிய மரியாதை, அன்பை பாஜக வழங்கும்’ என்றாா்.
மாநில பாஜக தலைவா் திலீப் சைகியா கூறியதாவது: பாஜகவின் பலம் இன்று மேலும் அதிகரித்துள்ளது. பிரதமா் மோடி, முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோரின் பணிகளால் ஈா்க்கப்பட்டு, பாஜகவில் புதியவா்கள் சோ்ந்து வருகின்றனா். பூபேன் போராவின் அரசியல் அனுபவமும், நிா்வாகத் திறனும் பாஜகவை வலிமைப்படுத்தும்’ என்றாா்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 16-ஆம் தேதி விலகுவதாக பூபேன் போரா அறிவித்தாா். ஆனால் அவா் விலகலை காங்கிரஸ் ஏற்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவா்கள் நேரில் சென்று பேசினா். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் பேசினாா். எனினும் பூபேன் போரா தனது முடிவை திரும்பப் பெறவில்லை.
இந்நிலையில், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, பூபேன் போராவின் இல்லத்துக்குச் சென்று பாஜகவில் சோ்வது குறித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதையடுத்து, பூபேன் போரா பாஜகவில் சேருவாா் என்று அஸ்ஸாம் முதல்வா் அறிவித்தாா். அதே போல தற்போது பூபேன் போரா பாஜகவில் இணைந்துள்ளாா். இது அஸ்ஸாம் காங்கிரஸை மிகவும் பலவீனப்படுத்தும் என்று கருதப்படுகிறது.