கோப்புப் படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் 29 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் 29 நக்சல்கள் சரணடைந்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில், 29 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (ஜன. 14) சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுக்மா மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளைச் சேர்ந்த 29 நக்சல்கள் மூத்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் முன்னிலையில் இன்று சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சரணடையும் நக்சல்களுக்காக மாநில அரசு வழங்கி வரும் மறுவாழ்வுத் திட்டங்களின் மூலம் ஈர்க்கப்பட்டு இவர்கள் அனைவரும் சரணடைந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவில், ரூ.2 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த போடியம் புத்ரா என்பவர் சரணடைந்துள்ளார். இவர், கோகுண்டா பகுதியில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதல்களுக்காகத் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சத்தீஸ்கரில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,500 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். மேலும், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

It has been reported that 29 Naxalites surrendered to the security forces in Chhattisgarh state today (Jan. 14).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு வருகை தரும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிறைவு!

சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி - திரளான பக்தர்கள் தரிசனம்..!

SCROLL FOR NEXT