மாயாவதி கோப்புப் படம்
இந்தியா

அரசியலுடன் மதத்தை இணைக்கும் நடைமுறை ஆபத்தானது: மாயாவதி

அரசியலையும் மதத்தையும் இணைப்பதற்கு எதிராக மாயாவதியின் கருத்து..

இணையதளச் செய்திப் பிரிவு

குறுகிய நலன்களுக்காக அரசியலையும் மதத்தையும் இணைப்பதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் எச்சரிக்கை தெரிவித்தார்.

பத்ரிநாத்தில் உள்ள ஜோதிடர் மடத்தின் தலைவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் மற்றும் பிரயாக்ராஜில் உள்ள மகா மேளா நிர்வாகம் ஆகியோருக்கும் இடையே நடந்துவரும் சர்ச்சை குறித்து உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான மாயாவதி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

உத்தரப் பிரதேச தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் பிற பகுதிகளிலும் கூட மத விழாக்கள், சடங்குகள், புனித நீராடல் மற்றும் பிற மத நடவடிக்கைகளில் அரசியல் தலையீடும் செல்வாக்கும் சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன.

இந்த தலையீடு புதிய சர்ச்சைகள், பதட்டங்கள் மற்றும் மோதல்களுக்கு வழிவகுக்கிறது. இனி சரியானதல்ல. இத்தகைய நிகழ்வுகளைக் கண்டு மக்கள் மன உளைச்சலுக்கும், கவலைக்கும் உள்ளாகின்றனர்.

குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலுடன் மதத்தை இணைப்பது எப்போதும் ஆபத்துக்களை விளைவிக்கும். பிரயாக்ராஜில் புனித நீராடல் தொடர்பாக பரஸ்பர அவமரியாதை மற்றும் குற்றச்சாட்டுகளுடன் நடந்து வரும் சர்ச்சை இதற்கு உதாரணம்.

அரசியலமைப்பு சட்டமும் பொது நலனில் கவனம் செலுத்தும் செயல்களையே உண்மையான தேசிய கடமையாக அங்கீகரிக்கின்றன, அரசியலில் இருந்து மதத்தை தனித்து வைத்திருக்கின்றன.

அரசியல் தலைவர்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் தங்கள் அரசியலமைப்புச் சட்டக் கடமைகளை சரியான நோக்கம், கொள்கையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய சூழலில் மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள், பிரயாக்ராஜில் புனித நீராடல் தொடர்பான தவறான சர்ச்சை, ஒருமித்த கருத்தின் மூலம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீடு முடிவு செய்யப்படும் வரை எந்தவொரு மதத் தலைவரையும் ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியாராக நியமிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டு, சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் தன்னை ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியாராக எவ்வாறு முன்னிறுத்துகிறார் என்பது குறித்து விளக்கம் கேட்டு மகா மேளா நிர்வாகம் திங்கள்கிழமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மகா கும்பமேளாவின்போது மௌனி அமாவாசை அன்று புனித நீராடச் சென்ற சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதியை, காவல்துறையும் நிர்வாகமும் தடுத்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து அவர் மேளா நிர்வாகத்தை விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bahujan Samaj Party president Mayawati on Saturday cautioned against linking religion and politics for narrow interests, saying that such practices always carry serious risks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

2-வது ஒருநாள்: இலங்கை அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

ஒரே மேடையில் சுனிதா வில்லியம்ஸ் - பாவனா! இலக்கியத் திருவிழாவில் சுவாரசியம்!

காலாண்டு வருவாய் அறிவிப்புக்குப் பிறகு ரிலையன்ஸ் 3% சரிவு!

மீண்டும் வெல்வோம்! நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வருவோம்! - முதல்வர் Stalin

SCROLL FOR NEXT