காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு
கர்நாடகத்தில் காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுமுறை - கர்நாடக டிஜிபி உத்தரவு!
கர்நாடகத்தில் காவல்துறையினர் பிறந்தநாள், திருமண நாளில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளாற் அம்மாநில டிஜிபி.
கர்நாடக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) எம். ஏ. சலீம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாளைக் கொண்டாட விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிபியின் இந்தப் புதிய உத்தரவு காவலர்களின் மன அழுத்தத்திலிருந்தும், பணிச் சுமையிலிருந்தும் விடுபட பேருதவியாக இருந்து அவர்கள் மன, உடல்நலம் சிறக்க முன்னோடித் திட்டமாக அமைந்துள்ளதாகவும், இந்த உத்தரவு, காவலர்கள் மட்டுமில்லாது அவர்தம் குடும்பங்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
Karnataka Police Personnel To Get Leave On Birthdays & Anniversaries
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.