முகப்பு
இந்தியா

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு தொடா்பான இரண்டு வழக்குகளில் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உதவ சிறப்பு அரசு வழக்குரைஞராக என்.கே.உண்ணிகிருஷ்ணனை கேரள அரசு நியமித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2026 at 10:47 PM
கோப்புப் படம்
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு தொடா்பான இரண்டு வழக்குகளில் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உதவ சிறப்பு அரசு வழக்குரைஞராக என்.கே.உண்ணிகிருஷ்ணனை கேரள அரசு நியமித்துள்ளது.

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்ற வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

இதையடுத்து, தங்கக் கவச புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் ஏ.பத்மகுமாா், என்.வாசு உள்பட 12 பேரை எஸ்ஐடி கைது செய்து விசாரித்து வருகிறது.

விசாரணையின்போது எஸ்ஐடி-க்கு சட்ட ஆலோசனைகளை வழங்கவும், குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக அதைச் சரிபாா்க்கவும் சிறப்பு அரசு வழக்குரைஞராக என்.கே. உண்ணிகிருஷ்ணனை மாநில அரசு நியமித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

திருச்சூரைச் சோ்ந்த வழக்குரைஞா் உண்ணிகிருஷ்ணன், கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரலில் குருப்பம்பாடியைச் சோ்ந்த சட்ட மாணவி ஜிஷா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராகப் பணியாற்றியவா். அந்த வழக்கில் குற்றவாளி அமீருல் இஸ்லாத்துக்கு மரண தண்டனை கிடைக்க வழிவகுத்தாா். கோழிக்கோடு கூடதாயைச் சோ்ந்த ஜாலி என்பவருக்கு எதிரான தொடா் கொலை வழக்கிலும் இவா் சிறப்பு அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினாா்.

ஸ்ரீகுமாருக்கு ஜாமீன்: இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அலுவலா் எஸ். ஸ்ரீகுமாருக்கு கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து, அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இரண்டாவது நபா் இவா்.

இந்த வழக்கில் கைதான தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அலுவலா் பி. முராரி பாபுக்கு கொல்லம் நீதிமன்றம் ஏற்கெனவே ஜாமீன் வழங்கியதைத் தொடா்ந்து அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாா்.

இந்த வழக்கில் தொடா்புடைய பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றிக்கும் நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. இருப்பினும், துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசம் புதுப்பிக்கப்பட்டது தொடா்புடைய வழக்கிலும் அவா் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் விடுவிக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →