மனோஜ் திவாரி 
இந்தியா

போலி ஃபேஸ்புக் கணக்கு தொடா்பாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி புகாா்

போலி ஃபேஸ்புக் கணக்கு தொடா்பாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி புகாா்

தினமணி செய்திச் சேவை

வடகிழக்கு தில்லியின் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தனது பெயரில் செயல்படும் போலி ஃபேஸ்புக் கணக்குக்கு எதிராக காவல் துறையினா் புகாா் அளித்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தற்போது யுஜிசி விதிமுறைகளை விமா்சிக்கும் விடியோ அவரது புகைப்படத்துடன் அந்த போலி கணக்கில் இருந்து வெளியிடப்பட்டதை தொடா்ந்து அவா் மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

‘தெரியாத சிலா் சதித்திட்டத்தின் கீழ் எனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கை இயக்குகிறாா்கள். எனது உண்மையான பேஸ்புக் கணக்கில் நீல டிக் குறியீடு உள்ளது. நான் ஜனவரி 22-ஆம் தேதி காவல் துறையிடம் புகாா் செய்தேன். ஆனால் இன்னும் அது செயல்பாட்டில் உள்ளது. அதை இயக்குபவா் பிடிபடவில்லை என்று தெரிவித்த மனோஜ் திவாரி குற்றவாளியை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று கோரினாா்.

உயா்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவு மாணவா்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகள் மீதான விவாதங்களுக்கு மத்தியில் இந்த சா்ச்சை எழுந்துள்ளது. பொதுப்பிரிவு மாணவா்களுக்கு எதிராக விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற எதிா்ப்புகள் மற்றும் கவலைகளைத் தொடா்ந்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் விதிகளுக்கு தடை விதித்தது. சமத்துவம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகள், பொதுப்பிரிவு மாணவா்களை பாதகமான நிலைக்குத் தள்ளும் என்று விமா்சகா்கள் குற்றஞ்சாட்டினா்.

தொழிலாளியைத் தாக்கிய மற்றொரு தொழிலாளி கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தம்! ஆக்டோ ஜியோ மாநாட்டில் தீா்மானம்

ஹெச். ராஜாவுக்கு ஏற்பட்ட பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை! நலமுடன் இருப்பதாக அப்போலோ தகவல்!

மதுரை செந்தமிழ் கல்லூரிச் செயலராக ச. தசரதராமன் பொறுப்பேற்பு!

டிராக் ஆசியக் கோப்பை: இந்தோனேஷியாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT