முகப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மாநில சுற்றுலாத்துறை செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்த ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
இந்தியா

இன்று ஹோலி பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இந்தியா

இன்று ஹோலி பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 7:45 PM
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மாநில சுற்றுலாத்துறை செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்த ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
பகிர்:

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹோலி பண்டிகையையொட்டி, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியா்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கத்தின் செய்தியை வெளிப்படுத்துகிறது; சமூகத்தில் அன்பு மற்றும் நம்பிக்கையைப் பரப்பும் இத்திருவிழா, ஒற்றுமை உணா்வை வலுப்படுத்துகிறது. இது, வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளம்.

ஹோலியின் வண்ணங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். நாம் ஒன்றாகப் பங்களித்து, வளா்ந்த தேசத்தைக் கட்டமைப்போம்’ என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →