முகப்பு
இந்தியா

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு... மௌனம் கலைக்குமா பாஜக? டிகே சிவக்குமார் கேள்வி!

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக பாஜகவை விமர்சித்த கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார்.

Updated On : 10 மார்ச், 2026 at 10:57 AM
டி.கே. சிவக்குமார் (கோப்புப்படம்) - Photo: X / DK Shivakumar
பகிர்:

இந்தியா முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ள நிலையில் பாஜகவினர் அதைப்பற்றி வாய்திறக்காமல் இருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், ”இந்த விவகாரத்தை அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இதுபற்றிப் பேச இன்று அவர்கள் அனுமதிக்க வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை மிகவும் மோசமாகி வருகிறது. நம்மிடம் போதிய கையிருப்பு இல்லை.

இப்போது, எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பலரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பாஜக எம்பிக்கள் இதுபற்றி வாய் திறக்காமல் மௌனமாக உள்ளனர். அவர்கள் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கும் நேரத்தில் மற்ற பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது விநோதமாக உள்ளது.

Advertisement

முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடக தொடர்பான பல பிரச்னைகள் பற்றி பேசியுள்ளார். அவர் தனது கட்சி எம்பிக்களை எரிவாயு தட்டுப்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் பேசச் சொல்லவேண்டும்.

எல்பிஜி சிலிண்டர் விநியோகம் மற்றும் விலை நிர்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த விவகாரத்திற்கு தேசிய அளவில் விரைந்து தீர்வு காணவேண்டும்” என்று டிகே சிவகுமார் கூறினார்.

summary

Karnataka Deputy Chief Minister DK Shivakumar criticized the BJP over the gas cylinder shortage.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments