முகப்பு
இந்தியா

பிரதமர் பணிந்துவிட்டார்! மக்களவையில் ராகுல் காந்தி vs ரவி சங்கர் கடும் வாதம்!

மக்களவையில் ராகுல் காந்தி - ரவி சங்கர் பிரசாத் இடையே நடைபெற்ற காரசார விவாதம் பற்றி...

Updated On : 11 மார்ச் 2026, 4:01 pm IST
ராகுல் காந்தி vs ரவி சங்கர் பிரசாத் - ANI
பகிர்:

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத்துக்கும் இடையே புதன்கிழமை கருத்து மோதல் ஏற்பட்டது.

மக்களவையில் அவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த எம்பியும், முன்னாள் அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத், ”எதிர்க்கட்சித் தலைவர் தனது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும், குறிப்பாக, தேசிய பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து பேசும்போது” எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதனிடையே, ரவி சங்கரின் உரையைக் குறிக்கிட்டு ராகுல் காந்தி பேசியதாவது:

”இந்த விவாதமானது ஜனநாயக செயல்முறை மற்றும் அவைத் தலைவரின் பங்கு பற்றியது. ஆனால், பல முறை எனது பெயர் எழுப்பப்படுகிறது. என்னைப் பற்றிய விஷயங்கள் பேசப்படுகின்றன. இந்த அவை ஒரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது கிடையாது. முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

நான் எப்போதெல்லாம் பேச முயற்சிக்கிறேனோ அப்போதெல்லாம் தடுக்கின்றனர். கடைசியாக நான் பேசியபோது, பிரதமர் சமரமானது பற்றி அடிப்படை கேள்விகளை எழுப்பினே.

நரவணே பிரச்னையையும், எப்ஸ்டீன் கோப்புகள் பிரச்னைகளையும், அதானி பிரச்னைகளையும் எழுப்பினேன். அப்போதெல்லாம் நான் அமைதியாக்கப்பட்டேன். இதெல்லாம் இந்திய மக்களுக்கு அடிப்படையானவை. பிரதமர் பணிந்துவிட்டார். அவர் பணிந்துவிட்டதால் ஏற்படும் விளைவு அனைவருக்கும் தெரியும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரவிசங்கர் பிரசாத், "பிரதமர் நரேந்திர மோடியை ஒருபோதும் பணிய வைக்க முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஒருவரின் ஈகோவுக்காக இந்த தீர்மானத்தை மக்களவையில் விவாதிப்பது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

summary

Rahul Gandhi vs Ravi Shankar Prasad in Lok Sabha! Heated debate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments