முகப்பு
இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 14 மார்ச், 2026 at 1:34 PM
சபரிமலை ஐயப்பன் கோயில்.
பகிர்:

தமிழின் பங்குனி, மலையாள மாதமான மீனத்தின் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை நடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

மாதாந்திர பூஜைகள் நிறைவடைந்த பிறகு மார்ச் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை நடை மீண்டும் அடைக்கப்படும். தொடர்ந்து, சபரிமலையில் மார்ச் 23ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடத்தப்படும்.

பக்தர்கள் தரிசனத்திற்கு sabarimala.org.in, தங்கும் அறைகள் முன்பதிவுக்கு www.onlinetdb.com அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The doors of the Sabarimala Ayyappan Temple were opened on Saturday.

முழு கட்டுரையைப் படிக்க →