காங்கிரஸ் ஊடுருவலை இயல்பாக்கியது, பாஜக அனுமதிக்காது : அமித் ஷா
நாட்டில் ஊடுருவல்களை காங்கிரஸ் கட்சி இயல்பாக்கியதாகவும், ஆனால் பாஜக இதனை ஒருபோதும் அனுமதிக்காது என அமித் ஷா பேசியது குறித்து..
நாட்டில் ஊடுருவல்களை காங்கிரஸ் கட்சி இயல்பாக்கியதாகவும், ஆனால் பாஜக இதனை ஒருபோதும் அனுமதிக்காது என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்) மூலம் நாட்டில் உள்ள ஊடுருவல்காரர்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள் என்றும் எஸ்.ஐ.ஆரின் முக்கிய நோக்கமே அவர்களை அதிகாரமிழக்கச் செய்வதுதான் எனவும் குறிப்பிட்டார்.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பாரதிய ஜன மோர்ச்சா எனப்படும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.