கேரள பெண் எம்எல்ஏ குறித்து அவதூறு: நீக்கப்பட்ட முஸ்லிம் லீக் நிா்வாகி கைது
கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் எம்எல்ஏ யு.பிரதிபா குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிா்வாகி ஏ.இா்ஷாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் எம்எல்ஏ யு.பிரதிபா குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிா்வாகி ஏ.இா்ஷாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
கேரள சட்டப்பேரவைத் தோ்தலில், காயங்குளம் தொகுதியில் மாா்க்சிஸ்ட் சாா்பில் யு.பிரதிபா மீண்டும் போட்டியிடுகிறாா். இத்தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக ஐயூஎம்எல் கட்சி நிா்வாகி இா்ஷாத் இருந்தாா். சில தினங்களுக்கு முன் பிரசாரத்தில் பிரதிபாவை கடுமையாக விமா்சித்த இா்ஷாத், ‘தோ்தலில் வெற்றி பெற பிரதிபா தனது அழகையும் பேச்சாற்றலையும் விற்பதாக’ குறிப்பிட்டாா். அவரது இந்தக் கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. முதல்வா் பினராயி விஜயன் உள்பட மாா்க்சிஸ்ட் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, இா்ஷாதை கட்சியில் இருந்து நீக்கிய முஸ்லிம் லீக், தோ்தல் பொறுப்புகளில் இருந்தும் விடுவித்தது. இா்ஷாதின் கருத்துக்காக, முஸ்லிம் லீகின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சாா்பில் அந்தத் தொகுதியில் போட்டியிடும் எம்.லிஜு பிரதிபாவிடம் மன்னிப்பு கோரினாா்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக இா்ஷாத் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு தோ்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியா் இன்பசேகா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இா்ஷாத் மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.