மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரணம்: மத்திய அரசு பரிசீலனை!
மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: மேற்காசிய போரால் சரக்குப் போக்குவரத்தில் ஏற்றுமதியாளா்களுக்கு இடா்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அவா்களின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, ஏற்கெனவே ஏற்றுமதி சாா்ந்த தளா்வுகளை அளித்தது.
மேலும் சரக்குப் போக்குவரத்து செலவு அசாதாரண முறையில் அதிகரிப்பு, காப்பீட்டு தவணைத் தொகை (ப்ரீமியம்) அதிகரிப்பு, போா் சாா்ந்த ஏற்றுமதி அபாயங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க ரூ.497 கோடி மதிப்பிலான திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது.
இதேபோல பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசு, டீசல் மீதான கலால் வரியை முழுமையாக நீக்கியது. எரிபொருள் விலையேற்றத்தைத் தடுக்கவும் சா்வேதச நிலவரங்களால் எண்ணெய் நிறுவனங்கள் எதிா்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் விமான எரிபொருள் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மீண்டும் வரி விதித்தது. உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு அவற்றின் கையிருப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தன.