முகப்பு
இந்தியா

பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களுடன் அகிலேஷ் யாதவ் பேசியது குறித்து..

அகிலேஷ் யாதவ் - பிடிஐ
பகிர்:

மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் படுகொலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பு என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜியை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களுடன் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

''பாஜக ஆட்சியின் கீழ், தேர்தல் நடைமுறைகள் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்துக்கொண்டு தேர்தல் முடிவுகள் என்ன என்று முதலில் தெரிந்துகொண்டு பின்னர், வெற்றிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பின்னர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதைப்போன்றும், இறுதியாகத்தான் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டதைப் போன்றும் உணர்வு ஏற்படுகிறது.

Advertisement

போராட்டக் குணம் கொண்டவராகவும், துணிச்சலுடன் களமாடுபவராகவும் மமதா பானர்ஜி திகழ்கிறார். அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கப்போவதில்லை.

நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதிப் பங்கைக் கொண்ட பெண்களின் பிரதிநிதியாகத் திகழ்வதால், அவர் பாஜகவினருக்குப் பெரும் சவாலாக இருக்கிறார். ஆணாதிக்க மற்றும் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை கொண்ட பாஜக தலைவர்களால், ஒரு பெண் உயர்ந்து வருவதைக் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை'' எனக் குறிப்பிட்டார்.

summary

BJP have completely altered the electoral process Samajwadi Akhilesh Yadav

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.