மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
மகாராஷ்டிரத்தில், ஒரே நாளில் சுமார் 50 காவல் துறை உயர் அதிகாரிகள் (ஐபிஎஸ்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி மும்பை காவல் இணை ஆணையர் (குற்றம்) லக்ஷ்மி கௌதம், அம்மாநிலச் சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெனரலாக (ஐஜி) இடமாற்றம் செய்யப்பட்டார்.
கூடுதல் காவல் ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சத்யநாராயண் சௌதரி போக்குவரத்து பிரிவின் கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், போக்குவரத்து பிரிவின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய அனில் கும்பாரே சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் காவல் ஆணையராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெனரல் பதவி வகித்த 12த் ஃபெயில் படத்தின் நிஜ வாழ்க்கை அதிகாரி மனோஜ் குமார் சர்மா உள்ளிட்ட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மனோஜ் குமார் சர்மா மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.