மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
மகாராஷ்டிரத்தில், ஒரே நாளில் சுமார் 50 காவல் துறை உயர் அதிகாரிகள் (ஐபிஎஸ்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி மும்பை காவல் இணை ஆணையர் (குற்றம்) லக்ஷ்மி கௌதம், அம்மாநிலச் சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெனரலாக (ஐஜி) இடமாற்றம் செய்யப்பட்டார்.
கூடுதல் காவல் ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சத்யநாராயண் சௌதரி போக்குவரத்து பிரிவின் கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், போக்குவரத்து பிரிவின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய அனில் கும்பாரே சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் காவல் ஆணையராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெனரல் பதவி வகித்த 12த் ஃபெயில் படத்தின் நிஜ வாழ்க்கை அதிகாரி மனோஜ் குமார் சர்மா உள்ளிட்ட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மனோஜ் குமார் சர்மா மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
In Maharashtra, approximately 50 senior police officers (IPS) have been transferred in a single day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.