போக்சோ வழக்கு: போலீஸ் முன் ஆஜராகுமாறு மகனுக்கு பண்டி சஞ்சய் அறிவுறுத்தல்
போக்சோ வழக்கில் போலீஸ் முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரி மகனிடம் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் அறிவுறுத்தியுள்ளார்.
போக்சோ வழக்கில் போலீஸ் முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரி மகனிடம் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் அறிவுறுத்தியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சயின் மகனான பகீரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க தெலங்கானா உயர் நீதிமன்றம் அண்மையில் மறுத்துவிட்டது.
இதையடுத்து தனது மகனை போலீஸ் முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கூறியுள்ளதாக அவரது தந்தையும் மத்திய அமைச்சருமான பண்டி சஞ்சய் குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.
Advertisement
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் புகார் பதிவு செய்யப்பட்ட உடனேயே, போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மகனிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து கூறி வரும் பகீரத், வழக்கறிஞர்களிடம் தனக்கு சாதகமான ஆதாரங்களை சமர்ப்பித்தார் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
பண்டி சஞ்சய் அளித்த தகவலின்படி, இந்த வழக்கு ரத்து செய்யப்படும் என்றும் பகீரத்துக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்ததே அவர் ஆஜராவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.