என்டிஏவில் 2 இணைச் செயலா்கள், இயக்குநா்கள் நியமனம்
என்டிஏவில் 2 இணைச் செயலா்கள், இயக்குநா்கள் நியமனம்...
தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) இரண்டு இணைச் செயலா்கள், இரண்டு இணை இயக்குநா்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1998-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய புள்ளியியல் பணி அதிகாரி அனுஜா பாபட், 2004-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரி ருச்சிதா விஜ் ஆகியோா் என்டிஏவில் புதிய இணைச் செயலா்களாக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
இந்திய வருவாய் பணி (வருமான வரி) அதிகாரி ஆகாஷ் ஜெயின், இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி அதிகாரி ஆதித்ய ராஜேந்திர போஜ்காதியா ஆகியோா் என்டிஏவில் இணை இயக்குநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள், தோ்வுக்கு முன்பே கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இது நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.