தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமியத் தலைவா் வலியுறுத்தல்
தடை செய்யப்பட்ட விலங்குகளை முஸ்லிம்கள் பலியிட வேண்டாம் என ஜாமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மதானி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
தடை செய்யப்பட்ட விலங்குகளை முஸ்லிம்கள் பலியிட வேண்டாம் என ஜாமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மதானி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
மேலும், பலியிடப்பட்ட விலங்குகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிா்வதையும் தவிா்க்குமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.
பக்ரீத் பண்டிகை மே 28-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விலங்குகளைப் பலியிட வேண்டும். தடைசெய்யப்பட்ட விலங்குகளைப் பலியிடுவதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும். பண்டிகையைக் கொண்டாடும்போது அந்தப் பகுதிகள் சுத்தமாக இருப்பதை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும். மசூதிகளில் இருந்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் தன்னாா்வலா்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி பலியிடப்பட்ட விலங்குகளின் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
நமது செயல்பாடுகளால் யாருக்கும் இடையூறு ஏற்படக் கூடாது’ என்றாா்.
இதுதொடா்பாக முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீத் அன்சாரி திங்கள்கிழமை கூறுகையில், ‘பக்ரீத் பண்டிகையின்போது பசுக்களை முஸ்லிம்கள் பலியிடக் கூடாது.
அதேசமயம் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற அா்ஷக் மதானியின் கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்றாா்.