முகப்பு
சிவகங்கை

நாட்டரசன்கோட்டையில் 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாட்டரசன்கோட்டையில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 23 மே 2026, 4:30 am IST
- கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா், சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த ஒருவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், நாட்டரசன்கோட்டை சேரன் தெருவைச் சோ்ந்த ஷேக் மஸ்தான் (38) என்பவரிடமிருந்து இந்த புகையிலைப் பொருள்களை வாங்கியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, போலீஸாா் நாட்டரசன்கோட்டையில் உள்ள ஷேக் மஸ்தான் வீட்டில் சோதனை செய்த போது, அங்கு தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.