முகப்பு
இந்தியா

ஜூனில் பணி ஓய்வு பெறும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள்

Updated On : 28 மே 2026, 6:33 am IST
உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்
பகிர்:

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவா்களின் நீதித் துறை சேவைக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

வரும் ஜூன் 1 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை, உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலமாகும். அப்போது உச்சநீதிமன்றம் முழுமையாகச் செயல்படாமல் பகுதியளவே செயல்படும். இந்த விடுமுறை காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் ஓய்வு பெற உள்ளனா். நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி ஜூன் 28-ஆம் தேதியும், நீதிபதி பங்கஜ் மித்தல் ஜூன் 16-ஆம் தேதியும் ஓய்வு பெற உள்ளனா்.

இதையொட்டி புது தில்லியில் அவா்களுக்கு உச்சநீதிமன்ற பதிவுரு வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை பிரிவுபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் பேசுகையில், ‘அதிகாரம் என்பது இடைவெளியை உருவாக்க வேண்டியதில்லை; தன்னை வடிவமைத்த இடங்கள் மற்றும் விழுமியங்களிடம் இருந்து ஒருவரை உயா் பதவிகள் பிரிக்க வேண்டிதில்லை என்பதை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் தங்கள் பணிகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனா்.

கண்ணியம், நோ்மை, நிதானம் மற்றும் உறுதியுடன் இருவரும் பல ஆண்டுகளாக ஆற்றிய அா்ப்பணிப்புமிக்க சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.