விடுகதைகள்
அள்ளமுடியும்; ஆனால், கிள்ளமுடியாது. அது என்ன?
அள்ளமுடியும்; ஆனால், கிள்ளமுடியாது. அது என்ன?
விடை: தண்ணீர்
தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும். அது என்ன?
Advertisement
Advertisement
விடை: நெருப்பு
நூல் நூற்கும், ராட்டை அல்ல; ஆடை நெய்யும், தறியும் அல்ல. அது என்ன?
விடை: சிலந்தி
சூடுபட்டுச் சிவந்தவன், வீடுகட்ட உதவுவான். அவன் யார்?
விடை: செங்கல்
மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி, உரிக்க உரிக்கத் தோலாண்டி. அவன் யார்?
விடை: வெங்காயம்
பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்கமுடியவில்லை. அது என்ன?
விடை: முதுகு
அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?
விடை: காற்று
ஏழை படுக்கும் பாய், எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை. அது என்ன?
விடை: பூமி
பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந்தோட்டம். அது என்ன?
விடை: வானம்
பட்டையைப் பட்டையை நீக்கி, பதினாறு பட்டையை நீக்கி, முத்துப்பட்டையை நீக்கி, முன்னே வர்றாள் சீமாட்டி. அவள் யார்?
விடை: வாழைப்பூ
-கோட்டாறு ஆ.கோலப்பன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.