முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டியில் குடிநீர் இன்றி மக்கள் அவதி

பண்ருட்டி, டிச.31: தானே புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான பண்ருட்டி நகரில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குடிநீர் இன்றி காலி குடங்களுடன் மக்கள் தெருக

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:37 PM
பகிர்:

பண்ருட்டி, டிச.31: தானே புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான பண்ருட்டி நகரில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

குடிநீர் இன்றி காலி குடங்களுடன் மக்கள் தெருக்களில் அலைமோதுகின்றனர். இதனைத் தவிர்க்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று புகார் கூறுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தில் இருந்து, லாரிகளில் பகுதிபகுதியாக தண்ணீர் விட ஏற்பாடு செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மீட்புக் குழுவினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக டீசல் பம்ப் மோட்டார்களைக் கொண்டு நீர் இறைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நக்ராட்சித் தலைவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →