முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டியில் கல்லூரி மாணவி கடத்தல்: துணிக்கடை உரிமையாளருக்கு வலைவீச்சு

பண்ருட்டி, நவ.8: பண்ருட்டி வட்டம் கருக்கை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியம். இவரின் மகள் விஜயசாந்தி (வயது 22). இவர், கடலூரில் உள்ள தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் மூ

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:04 PM
பகிர்:

பண்ருட்டி, நவ.8: பண்ருட்டி வட்டம் கருக்கை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியம். இவரின் மகள் விஜயசாந்தி (வயது 22). இவர், கடலூரில் உள்ள தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தன்னுடைய கல்லூரிக்குச் சென்று வரும்போது, கடலூரில் இருந்து கருக்கை பஸ்ஸில் சென்றபோது, மோகன், துரை, செல்வராஜ், ஜெய், சுதாகர், ராஜா ஆகியோருடன் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் உள்ள ஜேகேஆர்டெக்ஸ் துணிக்கடை உரிமையாளர் ரமேஷ் என்பவர் சேர்ந்து, டாடா சுமோ காரில் மாணவியைக் கடத்திக் கொண்டு சென்றுவிட்டார்களாம். இந்தப் புகாரைப் பதிவு செய்த காடாம்புலியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். புகாரில் தெரிவிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →