காரைக்கால் அருகே நிரந்தர ஹெலிகாப்டர் தளம்
காரைக்கால், நவ.11: காரைக்கால் அருகே நிரந்தர ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்தார். இன்று காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காரைக்கால் - நாகப்பட்டினம் இடைய
காரைக்கால், நவ.11: காரைக்கால் அருகே நிரந்தர ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்தார்.
இன்று காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காரைக்கால் - நாகப்பட்டினம் இடையே நிரந்தர ஹெலிகாப்டர் தளம் ஒன்று அமைக்கப்படும். இதில் எப்போது அழைப்பு வந்தாலும், உடனடியாக விரைந்து உதவிக்கு வரும் நிலையில் ஹெலிகாப்டர் ஒன்றும் வைக்கப்படும். மீனவர்கள் கடலுக்குள் அகப்பட்டுக் கொண்டாலோ, அல்லது விபத்து, உடனடி உதவி போன்றவற்றுக்காக விரைந்து செல்லக்கூடிய நிலையில் அது இருக்கும் என்று கூறினார்.