பண்ருட்டி: அனுமதி இல்லாததால் மாயவரம் படப்பிடிப்பு நிறுத்தம்
பண்ருட்டி, நவ.15: பண்ருட்டி பகுதியில் நடந்துவரும் மாயவரம் படப்பிடிப்பு அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதால் நிறுத்தப்பட்டது. பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு கிராமம் கெடிலம் நதியில் மாயவரம் படத்திற்கான பாடல் க
பண்ருட்டி, நவ.15: பண்ருட்டி பகுதியில் நடந்துவரும் மாயவரம் படப்பிடிப்பு அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதால் நிறுத்தப்பட்டது.
பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு கிராமம் கெடிலம் நதியில் மாயவரம் படத்திற்கான பாடல் காட்சிகள் திங்கள்கிழமை படமெடுக்கப்பட்டது.
பண்ருட்டியில் உள்ள செம்மேடு, சேமக்கோட்டை, சேந்தநாடு(விழுப்புரம் மாவட்டம்) ஆகிய பகுதியில் படபிடிப்பு நடந்து வருகிறது. சீர்காழி, மாயவரம் பகுதியில் படபிடிப்பு முடிந்து தற்போது பண்ருட்டி வந்துள்ளனர்.
பண்ருட்டி பகுதியில் மூன்று நாட்கள் படப் பிடிப்பில் இரு பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். பொங்கல் பண்டிகைக்கு வெளிவரவுள்ள இப்படத்தை இயக்குநர் ராம்தேவ் இயக்குகிறார். இசை-சாய், டான்ஸ் மாஸ்டர்-தீனா, கதாநாயகியாக 9 ரூபாய் நோட்டு படத்தில் நடந்த இன்பநிலாவும், கதாநாயகனாக செல்வனும் (இயக்குனர்) நடிக்கின்றனர்.
திட்டமிட்டபடி இன்று காலை படப்பிடிப்புக்கு அனைவரும் ஆயத்தமாகினர். ஆனால், மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெறவில்லை என்பதால், படப்பிடிப்பை நிறுத்தும்படி போலீஸார் கூறினர். இதை அடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற படப்பிடிப்புக் குழுவினர், முறையான அனுமதி பெற்ற பிறகு படப்பிடிப்பைத் தொடருவோம் என்றனர்.