மதுரை, அக்.3: மதுரை மாவட்டம், ஒத்தக்கடை யானைமலை பகுதியில் வெள்ளி வேலை செய்பவர்கள் மின்சாரத்தை நம்பியே உள்ளனர். அண்மைக் காலமாக அறிவிக்கப்படாத திடீர் மின் தடை ஏற்படுவதால், தங்கள் பணிகள் வெகுவாகப் பாதிக்கப் படுவதாக அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை, ஒத்தக்கடை மின்வாரிய அலுவலகத்தை நோக்கி திரண்டு சென்ற அவர்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், மதுரை திருச்சி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.