காரைக்கால், அக்.14: காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி முதலாண்டு பயிலும் மாணவி மெகபூப் நிஷா (வயது19). இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தவர் வகுப்புக்குச் செல்லும்போது இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய தந்தை சவுதியில் வேலை பார்த்து வருகிறார்.
தகவல் கேள்விப்பட்ட புதுவை அமைச்சர் ராஜவேல் உடனே மருத்துவமனைக்குச் சென்று உறவினர் மற்றும் மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.