மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் நடிகர் மர்ம மரணம்
குன்னூர், அக்.31: மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் நடிகர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டதாக போலீஸார் கூறினர். குன்னூர் பகுதி கொடலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேலன். இவர் படுகர் இனத்தைச் ச
குன்னூர், அக்.31: மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் நடிகர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டதாக போலீஸார் கூறினர்.
குன்னூர் பகுதி கொடலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேலன். இவர் படுகர் இனத்தைச் சேர்ந்தவர். கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஓரளவு அறிமுகம் ஆனவர். பார்த்திபன், சாமி உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் வெற்றிவேலன். வயது 38. இவரது மனைவி லதா. மனைவியை விட்டு வெற்றிவேலன் கடந்த ஒன்றரை வருடங்களாக பிரிந்து வாழ்ந்தாராம்.
இந்நிலையில் குன்னூர் அருகே தூதுர்மட்டம் பகுதியில் ஒரு கழிவுநீர்க் கால்வாய் அருகில் அவர் உடல் கிடந்ததாக இன்று காலை போலீஸாரால் கண்டறியப்பட்டது. தீபாவளிக்கு முன் தினம் மாலை 7 மணி வரை அந்தப் பகுதியில் அவர் நடமாடியதைப் பார்த்ததாக உள்ளூர் மக்கள் கூறினர். குடிபோதையில் இருந்ததாகவும், அளவுக்கு மீறிக் குடித்திருந்தார் என்றும் அவர்கள் கூறினர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அங்கே சுற்றித் திரிந்ததாகவும் அவர்கள் கூறினர். இவர் இறந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்று அவரது உடல் போலீஸாரால் மீட்கப்பட்டு குன்னூர் மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டது.
Advertisement
இதன் பிறகே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தகவல் தெரியவரும் என்றனர் போலீஸார்.
வெற்றிவேலன், ஹொசமுங்காரு என்னும் படத்தை இயக்கி வந்தாராம்.
”ஹொச முங்காரு” - என்றால் படுகர் மொழியில் ”புதுவசந்தம்” என்று பொருள். கோவை, திருப்பூர், பெங்களூர் பகுதிகளில் படுக இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். “ஹோச முங்காரு” என்ற பெயரிலேயே படுகர் மொழியில் திரைப்படம் தயாராகி வந்தது. தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் இப்படத்தை தயாரித்து வந்தனர். இந்தப்படத்தின் இயக்குநராக வெற்றிவேலன் பணிசெய்தார். நீண்ட நாட்கள் இந்தப் படம் தயாரிப்பிலேயே இருந்து வந்தது.