பொள்ளாச்சி அருகே கிராம மக்கள் உண்ணாவிரதம்
பொள்ளாச்சி, ஏப்.16: பொள்ளாச்சி அருகே வடசித்தூர் கிராமத்தில் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இங்கே மேற்கொள்ளப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 6 மாதமாக செயல்படாத நி
பொள்ளாச்சி, ஏப்.16: பொள்ளாச்சி அருகே வடசித்தூர் கிராமத்தில் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இங்கே மேற்கொள்ளப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 6 மாதமாக செயல்படாத நிலையில், குடிநீர் வசதி இன்றியும், பேருந்துகள் நிறுத்தப்படாமல் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப் பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்த கிராம மக்கள் இன்று காலை முதல் வடசித்தூர் கிராமத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மக்களுக்கு ஆதரவாக அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளித்து, உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.