முகப்பு
தற்போதைய செய்திகள்

வங்கியில் இருந்து வந்தவரிடம் ரூ.3 லட்சம் பறித்து மர்ம நபர் தலைமறைவு

ஈரோடு, ஏப்.19: ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மிக அருகில், ஒரு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்தவரிடம் இருந்து ரூ. 3 லட்சத்தைப் பறித்துக் கொண்டு மர்ம நபர் தலைமறைவானார். ஈரோடு அருகே வில்வரசம்ப

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

ஈரோடு, ஏப்.19: ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மிக அருகில், ஒரு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்தவரிடம் இருந்து ரூ. 3 லட்சத்தைப் பறித்துக் கொண்டு மர்ம நபர் தலைமறைவானார்.

ஈரோடு அருகே வில்வரசம்பட்டியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 48). நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் இன்று பிற்பகல் பெருந்துறை சாலையில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய காரில் கதவைத் திறந்துகொண்டு அமர்ந்தார். அப்போது டூவீலர் வண்டியில் வந்த மர்ம நபர் ஒருவர், பெருந்துறைக்குச் செல்வதற்கு வழி என்ன என்று கேட்டார். அவருக்கு பதில் சொல்வதற்காக தன் ஓட்டுநர் பக்கம் திரும்பி வழி தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் காருக்குள் கை விட்டு பணத்தை பறித்துக் கொண்டு அந்த நபர் டூ வீலரில் வேகமாகச் சென்று மறைந்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த இந்தப் பணப் பறிப்புச் சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.