நிலப்பறிப்பு : கோகுல இந்திராவின் பெயரை நீக்க உத்தரவு
மதுரை, ஆக., 13 : நிலப்பறிப்பு வழக்கில் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர், கண்மாய் பகுதியை ஆக்ரமித்து செங்கல் சேம்பர
மதுரை, ஆக., 13 : நிலப்பறிப்பு வழக்கில் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர், கண்மாய் பகுதியை ஆக்ரமித்து செங்கல் சேம்பர் நடத்தி வருவதாகவும், தனக்கு சொந்தமான இடத்தை கண்மாய்க்குச் செல்லும் பாதையாக அபகரித்துக் கொண்டுள்ளதாகவும் திருப்பத்தூரைச் சேர்ந்த கமால் அகமது என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கினை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு தொடர்பில்லை. எனவே மனுவில் இருந்து அவரது பெயரை நீக்க வேண்டும். மேலும், சட்டத்துக்குட்பட்டு சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.