பிஆர்பி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை
மதுரை, ஆக., 31 : மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரினை அடுத்து, அனைத்து சுரங்கங்களிலும் ஆய்வு நடத்தி அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பி.ஆர்.பி. கிரானைட் நிறு
மதுரை, ஆக., 31 : மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரினை அடுத்து, அனைத்து சுரங்கங்களிலும் ஆய்வு நடத்தி அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் மேலூர் அருகே தெற்குத் தெரு அலுவலகத்தின் கீழ் உள்ள சுரங்க அறையில் கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிந்தால்தான் முழுத் தகவலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.