தற்போதைய செய்திகள்

மக்கள் பிரச்னைகளைப் பேசியதற்கு வழக்கா? விஜயகாந்த் ஆவேசம்

இன்று காலை நாமக்கல் நீதிமன்றத்தில் விஜயகாந்துக்கு எதிராக அரசு தொடர்ந்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வந்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழ்ச்செல்வன்

இன்று காலை நாமக்கல் நீதிமன்றத்தில் விஜயகாந்துக்கு எதிராக அரசு தொடர்ந்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வந்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,

மக்கள் நலப் பிரச்னைகளைப் பேசியதற்காக அரசு என் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. மக்கள் நலப் பிரச்னைகளைப் பேசியதற்கு வழக்கா? இந்த அரசு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு வரவில்லை. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள இந்த அரசு பழக வேண்டும். என் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். அவற்றை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல அரசுக்கு அழகு. இந்த அரசின் மீதான என் விமர்சனங்கள் இனி அதிகரிக்கும் என்றார் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT