ஸ்ரீவிலிபுத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலிபுத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
பேரணியை நகர் பெரிய மாரியம்மன்கோயில் முன்பு கல்லூரி முதல்வர் பேராசிரியர் மா.பழனிவேலு தலைமையில், நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் என்.ஜெகன் வரவேற்றார்.
பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் சென்றனர். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து வடக்கு ரத வீதியில் முடிவடைந்தது. மேலும் பேரணியில் கல்லூரி சார்பில் எய்டஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. பேரணியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.