அரசாணையில் திருத்தம் கோரி பிப்.2ல் 4 ஆயிரம் ஆசிரியர்கள் மொட்டையடித்து கோட்டை நோக்கி பேரணி செல்லவுள்ளதாக அறிவித்தனர்.
நாமக்கல்லில் இன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:
1981ல் வெளியிடப்பட்ட அரசாணை எண் 720ல் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி 4 ஆயிரம் ஆசிரியர்கள் மொட்டை அடித்துக் கொண்டு ராமாவரம் தோட்டத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசாணை என்பதால் ராமாவரத்தில் இருந்து பேரணை செல்வதாக முடிவு செய்ததாகத் தெரியவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.