கோவையில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவது தற்காலிக நிறுத்தம்
சிறுவாணி நீர் வருவது பிரச்னையில் உள்ளதால், இந்தப் பிரச்னை தீரும் வரை புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவது நிறுத்தப் படுகிறது.
கோவையில் சிறுவாணி குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும், சிறுவாணி நீர் வருவது பிரச்னையில் உள்ளதாலும், இந்தப் பிரச்னை தீரும் வரை புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவது நிறுத்தப் படுகிறது என்று கூறினார் கோவை மாநகர மேயர்.
இன்று கூடிய கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.