பிரதமர் உருவபொம்மை எரிப்பு: ஞானதேசிகன் கண்டனம்
10 நிமிடங்களுக்கு மேல் பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்திலிருந்து
பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவபொம்மையை எரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:
10 நிமிடங்களுக்கு மேல் பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். அவருக்கு மட்டுமல்ல அனைத்து மாநில முதல்வர்களுக்கும் 10 நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டதாகவும், யாரையும் அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
Advertisement
ஆனால், தில்லியில் முதல்வரை அவமதித்ததாக அதிமுகவினர் சிலர் பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவபொம்மை எரித்ததாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியதுஇச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கிக்கு வெள்ளிக்கிழமை (டிச. 28) மாலை கடிதம் எழுதியுள்ளேன். எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.