பொள்ளாச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்: உம்மன்சாண்டி உருவபொம்மை எரிப்பு
பொள்ளாச்சி, ஜூலை 1: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறுவாணி நதியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசைக் கண்டித்தும், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வல
பொள்ளாச்சி, ஜூலை 1: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிறுவாணி நதியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசைக் கண்டித்தும், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தியும், கேரள மாநிலத்தில் இருந்து கழிவுகளைக் கொண்டுவந்து தமிழகத்தில் கொட்டிச் செல்லும் கேரளாவின் செயலைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை எரித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.