முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சி அருகே நகைக்காக பெண் கொலை

பொள்ளாச்சி, ஜூலை 2: பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரம் பகுதியில் ஐஸ்வர்யா நகர் குடியிருப்பில் வசித்துவரும் விவசாயி சிவக்குமார் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கதவை உடைத்து 4 மர்ம நபர்கள் உள்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

பொள்ளாச்சி, ஜூலை 2: பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரம் பகுதியில் ஐஸ்வர்யா நகர் குடியிருப்பில் வசித்துவரும் விவசாயி சிவக்குமார் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கதவை உடைத்து 4 மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். சிவக்குமாரை கட்டிவைத்துவிட்டு, அவரது மனைவி சௌமியா(25)விடம் நகைகளைப் பறித்துள்ளனர். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரும்புக் கம்பியால் அவரது தலையில் தாக்கியுள்ளனர். அதில் அந்த இடத்திலேயே சௌமியா உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த மர்ம நபர்கள் 4 பேரும் வீட்டில் இருந்து 50 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து விவரம் தெரியவந்ததும் மாவட்ட எஸ்.பி. உமா சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணயை முடுக்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.