பொள்ளாச்சி அருகே நகைக்காக பெண் கொலை
பொள்ளாச்சி, ஜூலை 2: பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரம் பகுதியில் ஐஸ்வர்யா நகர் குடியிருப்பில் வசித்துவரும் விவசாயி சிவக்குமார் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கதவை உடைத்து 4 மர்ம நபர்கள் உள்
பொள்ளாச்சி, ஜூலை 2: பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரம் பகுதியில் ஐஸ்வர்யா நகர் குடியிருப்பில் வசித்துவரும் விவசாயி சிவக்குமார் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கதவை உடைத்து 4 மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். சிவக்குமாரை கட்டிவைத்துவிட்டு, அவரது மனைவி சௌமியா(25)விடம் நகைகளைப் பறித்துள்ளனர். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரும்புக் கம்பியால் அவரது தலையில் தாக்கியுள்ளனர். அதில் அந்த இடத்திலேயே சௌமியா உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த மர்ம நபர்கள் 4 பேரும் வீட்டில் இருந்து 50 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து விவரம் தெரியவந்ததும் மாவட்ட எஸ்.பி. உமா சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணயை முடுக்கிவிட்டார்.