முகப்பு
தற்போதைய செய்திகள்

ஐபிஎல்-ஆபாச நடனம்: அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூலை 18: அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழாவின் போது, ஆபாசமாக நடனம் ஆடிய பாப் பாடகி, கிரிக்கெட் வீரர் போலிஞ்சர், அமிதாப் பச்சன், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐசிசி தலைவர்,

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:
மதுரை, ஜூலை 18: அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழாவின் போது, ஆபாசமாக நடனம் ஆடிய பாப் பாடகி, கிரிக்கெட் வீரர் போலிஞ்சர், அமிதாப் பச்சன், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐசிசி தலைவர், உறுப்பினர்கள், மைதானப் பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.
ஜெபக்குமார் என்ற மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் துவக்க நிகழ்ச்சிகளின் போது கலாசாரத்துக்கு ஒவ்வாத வகையில் ஆபாசமாக நடனமாடி, பொது இடத்தில் தவறாக நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. 
வழக்கை விசாரித்து வரும் நீதிபதி எஸ்.செல்வம் ஜூலை 18ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார், அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இரு வார காலத்துக்குள் அவர்கள் அனைவரும் பதிலளிக்குமாறு கூறி, அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 31க்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
முழு கட்டுரையைப் படிக்க →