முகப்பு
தற்போதைய செய்திகள்

பிறர் இடத்தைக் காட்டி மனை விற்பனை: ரூ.1.89 கோடி மோசடி

கடையநல்லூர், ஜூலை 25: போலி ஆவணங்கள் கொண்டு ரூ.1.89 கோடிக்கு நில மோசடி செய்த 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கடையநல்லூரில் ராயல் ஹோம் பவுண்டேஷன் என்ற பெயரில், கடையநல்லூரைச் சேர்ந்த குலாம் முகமது, ஜஹா

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

கடையநல்லூர், ஜூலை 25: போலி ஆவணங்கள் கொண்டு ரூ.1.89 கோடிக்கு நில மோசடி செய்த 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடையநல்லூரில் ராயல் ஹோம் பவுண்டேஷன் என்ற பெயரில், கடையநல்லூரைச் சேர்ந்த குலாம் முகமது, ஜஹான், அகமது, ஷேக் உதுமான், ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார், நயினாரகரத்தைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன், செங்கோட்டையைச் சேர்ந்த மரியதாஸ் ஆகிய ஏழு பேரும், பலரிடம் மனை விற்பதாகக் கூறி போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.89 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனர். இவர்கள் 7 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்.

கம்பநேரி-புதுக்குடி என்ற இடத்தில் ஒரு மனையைக் காட்டி, இதில் மனைப்பிரிவுகள் போடப்பட்டுள்ளதாகக் கூறி, அனைத்துமே பதிவு செய்யப்பட்டும் உள்ளன. ஆனால், அந்த இடம் வேறு ஒருவருக்குச் சொந்தமானது என்றும், அதைக் காட்டி இவர்கள் 7 பேரும் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இதில் 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1400 வீட்டு மனைகள் இவ்வாறு போடப்பட்டுள்ளன.

இவர்கள் 7 பேரும் தலைமறைவாகி விட்டதால், போலீஸார் அவர்களைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →